1. ராமேஸ்வரத்தில் மீன்பிடி துறைமுகம் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில மின்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் துறைமுகத்தில் டீசல் விற்பனை நிலையத்தை நேற்று திறந்து வைத்து அவர் பேசினார் .
2. பாடி வேப்பம்பட்டு இடையிலான சாலை விரிவாக்க பணிகளுக்காக தமிழக அரசு 152 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார் விரிவாக்க பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார் சென்னை சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை குறித்து முதலமைச்சர் கொள்கை அடிப்படையில் முடிவு எடுப்பார் என்றும் திரு வேலூ தெரிவித்தார்
3. இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோவில்களில் பயன்படுத்த இயலாத தங்கத்தை கட்டிகளாக மாற்றி பொதுத்துறை வங்கிகளில் தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் கோவில்களின் திருப்பணிகளுக்கு நிதி கிடைப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு கூறியுள்ளார் திருவேற்காடு அருள்மிகு கருமாரியம்மன் ஆலயத்திற்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 42 கிலோ தங்கத்தை நேற்று பாரத ஸ்டேட் வங்கியிடம் டெப்பாசிட்  நிகழ்ச்சியில்  இதனை அவர் தெரிவித்தார் முதற்கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் இருக்கங்குடி அம்மன் கோவிலுக்கு பக்தர்களால் காணிக்கை அளிக்கப்பட்ட 27 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் மூலம் ஆண்டிற்கு வட்டி தொகையாக அந்த ஆலயத்திற்கு 23 லட்சம் பெறப்படுவதாக கூறினார். பெரியபாளையத்தம்மன் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட 91 கிலோ தங்கம் மாங்காடு கோவிலுக்கு சொந்தமான 39 கிலோ தங்கம் கட்டிகளாக மாற்றப்பட்டு தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
4. சிறந்த சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை விருது வழங்குவதற்கான பரிந்துரை குழுவின் இரண்டாவது கூட்டம் கர்நாடக சட்டப்பேரவை தலைவர் தலைமையில் நஞ.
5.இந்தியாவில் இன்று மாலை சந்திரன் உதயமாகும்போது கிரகணத்தை காணலாம் இந்த கிரகணம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் மணி 2 39க்கு தொடங்குகிறது முழு சந்திர கிரகணம் மாலை மணி 3 46 தொடங்கி சில நிமிடங்கள் நீடிக்கும் என்று மத்திய புவிய அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது கிரகணம் தொடங்கும் நிகழ்வு இந்தியாவின் எந்த பகுதிகளும் தெரியாது என்றும் மாலையில் சந்திரன் உதயம் ஆவதற்கு முன்பு நாட்டின் கிழக்கு பகுதிகளில் அதை காண முடியும் என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது சென்னை தில்லி மும்பை பெங்களூருவாகிய நகரங்களில் பகுதி சந்திர கிரகணத்தை காண முடியும் பௌர்ணமி அன்று பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே வருவதால் முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது காரணமாக சூரிய ஒளி வடிகட்டப்பட்டு பெரும்பாலும் சிவப்பு நிற கதிர்கள் மட்டுமே நிலவை அடையும் என்றும் எனவே முழு கிரகணத்தின் போது சந்திரன் செந்நிறமாக காட்சி அளிக்கும் என்றும் புதுடெல்லி விஞ்ஞானி முனைவர் தாவி வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார் முழு சந்திர கிரகணம் நடக்கக்கூடிய நிலையில் நிலா கருப்பாக தெரியாது பூமியை சுற்றி வளிமண்டலம் இருப்பதால் அந்த வளிமண்டலத்தின் ஊடே ஒளி செல்லக்கூடும் என்பதாலும் வளிமண்டலத்தின் வழியாக பாயக்கூடிய சூரிய ஒளி விலகல் தன்மையின் காரணமாக சற்றே வளைந்து நிலவின் மீது முழு நிலவு நிலையில் படரும் காரணமாக சூரிய ஒளி வடிகட்டப்பட்டு பெரும்பாலும் சிவப்பு நிற கதிர்கள் மட்டுமே நிலவை அடையும் எனவேதான் முழு நிலவு கிரகண சமயத்தில் நிலவு செம்பட்டையாக காட்சி தரும் இதைதான் இரத்த நிலவு அல்லது பிளட் மூன் என்று அழைக்கிறார்கள்.
 தெளிவாக நமக்கு புலப்படக்கூடிய பகுதியில் நின்று கொண்டு நாம் பார்த்தால் இந்த வானக் காட்சியை கண்டு களிக்கலாம் இந்த அற்புதமான காட்சியை வெறும் கண்ணால் நாம் கண்டு களிக்க முடியும் இந்த கிரகணத்தை காண்பதால் எந்தவித அபாயமும் அச்சுறுத்தலோ எதுவும் இல்லை .
6.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியதற்கு இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல கேள்விகளுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது 
7.இருவரி செய்திகள் வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று சந்தித்து பேசுகிறார் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு இன்று நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நான்கு கோடியே 22 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர் சிறந்த சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை விருது வழங்குவதற்கான பரிந்துரை குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது .
7. ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க நீக்க சிறப்பு முகாம் வரும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .


Share to All

0 comments:

 
Top